Wednesday, May 22, 2013

தமிழ் சரித்திரம் படிப்பார்களா,தமிழ் பள்ளி மாணவர்கள்?! (republished)


தமிழர் சரித்திரம்,வழி நெடுகிலும் பற்பல சிறந்த வீரதீரங்களையும், சாதனைகளையும் கண்டது. தமிழரின் சரித்திரம் தலைச்சிறந்த சரித்திர நாயகர்களை தன்னகத்தேக் கொண்டது. அவர்களுள், மாமல்லன் என அழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன், இராஜராஜன் எனப்பட்ட அருள்மொழிவர்மன், அவரின் புதல்வன் இராஜேந்திர சோழன், ஆகியோர் தமிழக வராலாற்றில் மட்டுமின்றி தமிழரின் வரலாற்றிலும் புகழ் பெற்றவர்கள். அதிலும் இராஜேந்திர சோழன் கடாரம், கம்பூச்சியம், சாவகம் என கடல் கடந்த தேசங்களில் எல்லாம் புலிக்கொடியை பறக்கவிட்டு, தமிழர் புகழ் உலக வரலாற்றிலும் நிலைத்து நிற்க செய்தவர். இதையெல்லாம் அறியும்போது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை தலைத்தூக்கும். அதேவேளையில், இராஜராஜ சோழனை பற்றியோ, இராஜேந்திர சோழனை பற்றியோ, மாமல்லனைப் பற்றியோ பேசும்பொழுது, யார் அவர்கள் என்று ஒரு தமிழன் கேட்டால், என்னவென்று சொல்வது??

ஆனால், அதுதான் உணமை.
நிகழப்போகும் உண்மை.

இன்றுள்ள நாம், கல்கியின் பார்த்திபன் கனவையோ, பொன்னியின் செல்வனையோ, அகிலனின் வேங்கையின் மைந்தனையோ படித்து விட்டு சரித்திரம் பேசலாம். ஆனால் தற்பொழுதுள்ள இளையோரிடமோ, பள்ளி மாணவர்களிடமோ பொன்னியின் செல்வன் என்று சொன்னால், கண்டிப்பாக அது தமிழ் திரைப்படம் என்று சொல்வார்களே தவிர, பொன்னியின் செல்வன் என்பது உணமையான சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நவீனம் என்பதை அறியமாட்டார்கள். இவ்வாறு சரித்திரம் மறந்த இனம் உருவாகையில் வருங்காலம் அந்த இனத்துக்கு என்ன வைத்திருக்கும்?? ஒவ்வொரு தமிழனுக்கும், தனது இனத்தின் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தோனேசியா, ஜாவாவில் அமைந்துள்ள பிரம்பனன் ஆலய தொகுதி

எனது பாட்டன், பூட்டன் காலத்தில் தமிழன் தமிழகத்திலிருந்து சஞ்சிக்கூலிகளாக இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டான். மலாய சுதந்திர பேச்சுகளில் வி.தி.சம்பந்தன் என்ற தமிழரும் பங்கு கொண்டார் என்று மட்டும் தெரிந்திருப்பதை விடுத்து, தமிழினத்தின் பூர்வீகம், அவனின் தொன்றுதொட்ட வரலாறு என்று அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தால்தான் தனித்தன்மை மிக்க தமிழன் நாளை தலைநிமிர்வான். சரித்திரத்தை மறந்த இனமும், சரித்திரத்தை மாற்றிக்கூறும் இனமும் சரித்திர சுவடே இல்லாமல் அழிந்து போகும் என்பதுதான் தின்னம்.


500-600 வருட சரித்திரப் பின்னணியைக் கொண்ட மலாயா சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியைத்தான் நமது மாணவர்கள் ஆரம்பக்கல்வி முதற்கொண்டு மேல்நிலைப் பள்ளி வரையில் பயில்கின்றனர். மாற்றாரின் குறுகிய சரித்திரத்தை பயிலும் நம் தமிழன், நமது நெடுநீண்ட சரித்திரத்தை பயிலாமல் மறக்க விட்டது, கல்வியமைச்சில் தமிழ் பாடப்பிரிவிற்கு பொறுப்பேற்றிருக்கும் நமது இன அதிகாரிகளின் தவறா??

தமிழன் சரித்திரம் படித்தால் தலை நிமிர்ந்து விடுவான், தலை நிமிர்ந்தால் நமது பதவிக்கு ஆப்பு வந்துவிடும் என்று கண்டும் காணாமல் விட்ட சமுதாயத்தின் அரசியல் தலைவர்களின் தவறா??

தமிழ் சரித்திரம் கொண்டே தமிழரை மீண்டும் தலைநிமிர வைக்க முடியும் என்று உணராமல் விட்டுவிட்ட தமிழ் வழி இயக்கங்களின் தவறா??

யார் தவறு??

நாளை தலையெடுக்கப்போகும் நம் தமிழன், சரித்திரம் தெரிந்த, தனித்தன்மையுடைய தமிழனாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா. அவ்வாறு ஒரு சரித்திரம் தெரிந்த தமிழினத்தை எப்படி உருவாக்குவது?? என்பதுதான் தற்போது நம்மிடம் நிலவும் கேள்வி, இந்த கேள்விக்கு ஒரே பதில், தமிழ் பள்ளிகளின் மூலம் என்பதுதான்.

தமிழ் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் தமிழ் வரலாறும் ஒரு பாடமாக கற்றுகொடுக்கப்பட வேண்டும். இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் தமிழரின் வரலாறு புரியும் வண்ணம் தமிழ் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும். உதாரணத்திற்கு, அறிஞர் மு.-வின் பாவை விளக்கு நவீனம் தற்பொழுது எஸ்.டி.பி.எம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அறிஞர் மு.-வின் சமுதாய கருத்துகள் மாணவர்களுக்கு தேவை என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால், அதே வேளையில் இன அடையாளம் அழியாமல் இருக்க வேண்டுமெனில், சரித்திரமும் முக்கியமல்லவா? ஆகவே, கல்கியின் பொன்னியின் செல்வனையோ, பார்த்திபன் கனவையோ, சிவகாமி சபதத்தையோ அல்லது மற்ற தமிழ் சரித்திர அறிஞர்களின் நவீனத்தையோ புதிதாக பாடத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம்.

இடைநிலை, மேல்நிலை கல்வியை விட அடிப்படைக்கல்வியான ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் சரித்திரம் சேர்க்கப்பட்டால்தான்,மிக சிறப்பாக அமையும்.

"தமிழ்ப்பள்ளியில் தமிழர் சரித்திரம்"
சாத்தியமா??
எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது??
யார் பொறுப்பேற்பது??

P.S

This article I wrote 5 years, back in 2008. After listening to Prof Ramasamy's speech in a function yesterday, wanted to republish again.

இந்த பதிவை 5 வருடங்களுக்கு முன்பு நான் பதிவிட்டிருந்தேன். நேற்று ஒரு நிகழ்வில், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, "நமது பிள்ளைகளுக்கு நமது சரித்திரம் இப்பொழுது எங்கே தெரிகின்றது?!" என்று பேசினார். அதனால், இதனை மறுப்பதிவு செய்தல் அவசியம் என கருதுகின்றேன்.

Tuesday, April 16, 2013

PENGUMUMAN ZULKIFLI NORDIN SEBAGAI CALON BN MEMBUKTIKAN BARISAN NASIONAL – NAJIB RAZAK TIDAK MENGHORMATI MASYARAKAT INDIA – HINDU DI MALAYSIA & KONSEP 1MALAYSIA HANYA RETORIK


Pengumuman Pengerusi Barisan Nasional, Datukseri Najib Tun Razak bahawa Pemimpin Perkasa Zulkifli Nordin sebagai calon Barisan Nasional bagi Parlimen Shah Alam membuktikan bahawa Barisan Nasional tidak menghormati perasaan masyarakat India beragama Hindu di Malaysia, dan laungan 1Malaysia oleh pemimpin BN, khususnya oleh Datukseri Najib itu sendiri adalah retorik politik yang bertujuan memperbodohkan rakyat.

ZULKIFLI NORDIN - SEORANG EKSTREMIS

Baru-baru ini, satu klip video telah tersebar di laman-laman media social, yang memaparkan Zulkifli Nordin menghina Tuhan dan kepercayaan orang-orang Hindu di Malaysia. Walaupun, Zulkifli kemudianya telah memohon maaf dan memberitahu bahawa ucapanya itu dibuat 10 tahun dahulu, semasa beliau menanggotai PAS, saya telahpun membongkarkan bahawa Zulkifli Nordin tidak ikhlas dalam permohonan maafnya dan telah menipu, kerana Dewa Murugan yang dibina di luar Batu Caves yang disebut dalam ucapan Zulkifli Nordin hanya siap dibina pada tahun 2006, iaitu 7 tahun lalu dan bukanya 10 tahun.

Beberapa laporan polis telah dibuat ke atas Zulkifli Nordin namun tiada tindakan telah diambil terhadapnya. Masyarakat Hindu di Malaysia, amat tidak berpuas hati dengan pihak berkuasa yang enggan mengambil tindakan terhadap Zulkifli Nordin itu. Walaubagaimanapun akhirnya UMNO-Barisan Nasional telah menunjukkan wajah ekstrim sebenarnya dengan mencalonkan ekstremis ini di Parlimen Shah Alam. Pencalonan Zulkifli Nordin membuktikan Laungan 1Malaysia oleh Najib dan para pemimpin BN adalah retorik kosong untuk mengaburkan mata rakyat sahaja.

DAPSY Pulau Pinang mengecam tindakan Barisan Nasional yang melindungi ekstremis bernama Zulkifli Nordin ini dan menawarkanya untuk bertanding sebagai calon Barisan Nasional di PRU13 ini. Saya juga tertanya-tanya apakah tindakan selanjut MIC dan parti-parti India seperti Makkal Sakthi & IPF yang menyokong BN dan kononya memperjuangkan hak orang-orang India di Malaysia? Adakah mereka akan berkempen menyokong Zulkifli Nordin sebagai calon BN secara terbuka atau secara senyap?

Yang nyata, masyarakat India akan menolak Barisan Nasional pada PRU 13 5hb Mei ini, kerana bukan sahaja Barisan Nasional sering menghina masyarakat Hindu, malah masih tidak sedar kesilapan mereka. DAPSY Pulau Pinang akan membawa isu ini kepada rakyat jelata dan akan pastikan BN ditumbangkan di Putrajaya.

“Malaysian Malaysia

SATEES MUNIANDY
Penolong Setiausaha DAPSY Pulau Pinang

Tuesday, April 2, 2013

கேலாங் பாத்தா பிரகடனம் – மலேசிய இந்திய சமுதாயத்தை ஆற்றல் மிக்க சமுதாயமாக்கும் வியூகங்களும்; தூரநோக்கு திட்டங்களும்


\

1.   நாடற்ற மலேசிய இந்தியர்களின் குடியுரிமைப் பிரச்சனையை, மத்தியில் மக்கள் கூட்டணி ஆட்சியமைத்த 100 நாட்களுக்குள் தீர்வு காண்பது


2. தேசிய நீரோட்டத்தில் ஒதுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக இடம்பெயர்ந்த தோட்ட பாட்டாளிகளுக்கு தேசிய வீடமைப்பு வாரியம் அமைத்து, வாழ்வதற்கு உகந்த வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்துதல்.

3. நாட்டிலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் முழு உதவிப்பெற்ற தமிழ்ப்பள்ளிகளாக மாற்றப்படும் அதேவேளையில் தேசிய பள்ளிகளுக்கு ஈடான கட்டமைப்புகளை தமிழ்ப்பள்ளிகளும் கொண்டிருப்பதை உறுதி செய்தல்

4. பள்ளி படிப்பை முடிக்காத, குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த இளையோருக்கு சிறப்பான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வண்ணம் தொழில்திறன் பயிற்சி திட்டங்கள் அறிமுகம் செய்தல்

5.  இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை எற்படுத்தித் தருவதோடு, குறைந்தபட்ச ஊதியமாக 1100 ரிங்கிட்டை நிர்ணயிப்பதன் வழி குறைந்த வருமானம் பெறும் இந்தியர்களின் நிலையை உயர்த்துதல்

6.   பொதுச்சேவைத்துறை, நகராண்மைக் கழகங்கள், அரசுசார் நிறுவனங்களில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

7. இந்து ஆலயங்கள், இடுகாடுகள் அமைந்திருக்கும் நிலங்களை, அவர்களுக்கே ஒதுக்குதல். அப்படி மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகையில் முறையான நிலத்தை அடையாளம் கண்டு ஒதுக்குதல்.

8.  சிறுதொழிலில் ஈடுபடும் இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்திய பெண்கள், இளையோர் மற்றும் வீட்டிலிருந்து செயல்படும் சிறுதொழில் முனைவர்களுக்கு சிறப்பு சிறுதொழில் கடனுதவி திட்டம் மற்றும் நிதியுதவி திட்டங்களை அறிமுகம் செய்தல்.

9. சுதந்திரமான காவல் துறை புகார் ஆணையம் ஒன்றை அமைப்பது; போலீஸ் காவலில் மரணங்களுக்கு ஒரு முடிவைக் காணுதல்

10. இந்தியர்களின் சொத்துடமையை அதிகரிக்க ஒரு சிறப்பு நிதியத்தை அமைத்தல்

11. நகரங்களில் வாழும் இந்தியர்களின் வறுமை நிலை மற்றும் சமூகப் பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்தி கையாள சிறப்பு ஆணையம் ஒன்றை அமைத்தல்

12. தனித்து வாழும் தாய்மார்களின், பொருளாதார நிலை, குறிப்பாக வீட்டுடமைத் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கொள்கைகளை வகுத்தல்

13. தோட்ட பாட்டாளிகளின் பிள்ளைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பயில தங்கும் வசதிக் கொண்ட பள்ளிகளை அமைத்தல்; தற்பொழுதுள்ள அவ்வாறான பள்ளிகளில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

14. மக்கள் நலனுக்கெதிரான அனைத்து சட்டங்களையும் அகற்றுதல், அனைத்து விதமான பாகுபாடுகளைக் களைதல்.

31 மார்ச் 2013
கேலாங் பாத்தா