Tuesday, June 28, 2011

Why MIC has no guts to face Racist PERKASA?


MIC has no guts to face Racist organizations such as PERKASA, which is threatening Nations unity, but dare to condemn the call for reforms.It was reported in Free Malaysia Today that Penang MIC Youths has lodged a Police report against Bersih 2.0 and the Bersih Chairperson Dato Ambiga.It is very obvious that, MIC is doing this to please their UMNO Bosses. Why Penang MIC Youth never had the guts and courage to lodge report against Ibrahim Ali's seditious statements that threats Nations unity? Why MIC Youths never had the guts to call for immediate withdrawal of Interlok novel which is insulting sentiments of Ethnic Indians and Ethnic Chinese of Malaysia?

MIC had never reflected Malaysian Indians feelings in past, and they will never reflects even in future. MIC is proud about being UMNO's sub-ordinants and reflect UMNO's views. MIC is against Bersih, because their bosses in UMNO are against it, that is the only reason why MIC Youths opposing Bersih! I don't think, the MIC Youths, especially those in Penang, does even understand what Bersih is stand for.

Bersih rally is not about race or religion, but it is about free and fair elections.Why is UMNO and BN parties like of MIC is afraid of, when we demand for free and fair elections?! If they can win the elections by the clean means, why they should worry?

I would advise Penang MIC Youth to involve in much more beneficial things, rather than resorting to this kind of low class antics to get cheap publicity. We would reiterate that Batu Kawan DAPSY and Penang DAPSY is very clear on its stand to support the call for reformed free and fair elections.
Some Tamil Poems of mine....
எனது கவிதைக்கிறுக்கல்களில் சில.....









Monday, June 27, 2011

டத்தோ அம்பிகாவைப் பற்றி குறைக்கூற கேவியசுக்கு தகுதியில்லை!! பினாங்கு ஜசெக சோஸியலிஸ்ட் இளைஞர் பிரிவு


நீதியான, நேர்மையான தேர்தலுக்கான கூட்டமைப்பான பெர்சேவின் தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசனை, தனது கட்சிக்கூட்டத்தில் மிகக்கடுமையாக சாடியிருக்கும் முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ கேவியசுக்கு, பினாங்கு மாநில ஜசெக சோஸலீஸ்ட் இளைஞர் பிரிவு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

அம்பிகா யாருக்கும் உதவாதவர் என்றெல்லாம் வசைப்பாடியிருக்கும் கேவியசின் கூற்றில் சிறிதும் அடிப்படையில்லை. உலக அரங்கில் மலேசியாவிற்கும், மலேசியத் தமிழர்களுக்கு பெருமைத் தேடித்தந்திருக்கும் டத்தோ அம்பிகா சீனிவாசனை தரம் தாழ்ந்து விமர்சிக்க கேவியசிற்கு சிறிதும் தகுதியில்லை. டத்தோ அம்பிகா சீனிவாசனை இவர் தாக்கியிருப்பது, இவருக்கும் வழக்கறிஞர் மன்றத்திற்கும் இடையே உள்ள பிரச்சனையை மையப்படுத்தியதா என்ற சந்தேகத்தையும் தூண்டுகிறது.

டத்தோ அம்பிகா யாருக்கும் உதவாதவர் என்று கூறியிருக்கும் கேவியஸ், தான் துணையமைச்சராக இருந்த காலத்தில் எத்தனைப் பேருக்கு உதவி செய்துள்ளார் என்று விளக்குவாரா? அடிக்கடி பரபரப்பான அறிக்கைகளை விடுத்து அரசியலில் தாக்குபிடிக்கும் அரசியல்வாதியான கேவியசிற்கு, சுய சிந்தனையோடு நாட்டின் தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு பெண்மணியை குறைக்கூறுவது மிகவும் கண்டனத்திற்குறியது

கடந்த காலங்களில் குறிப்பிட்ட அரசாங்கத்தில் இருந்த இந்திய தலைவர்களைக் குறைக்கூறி மலிவு விளம்பரம் தேடியவர் இந்த கேவியஸ். அதேப்போல தனது கட்சியிலிருந்து ஒரு இந்திய இளைஞர் துணையமைச்சராகி இந்தியர்களிடம் பிரபலமானார் என்றவுடன் அவரை எப்படி ஓரங்கட்டினார் என்பதை நாடே பார்த்தது. பல இந்திய தலைவர்களைக் குறைக்கூறிய கேவியஸ், இந்தியர்களுக்கு என்னதான் செய்தார் என்று கேட்டால், அவருக்கே பதில் கூற தெரியாது.

அரசியலில் இருந்து ஓரங்கட்டுப்பட விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி அறிக்கை விட்டு வரும் கேவியஸ், தனது அறிக்கைகளை சரியாக விடுத்தல் நல்லது. நீதிமிகு, நியாயமான தேர்தல் நடக்க வேண்டும் என்ற அர்த்தமுள்ள கோரிக்கையை பினாங்கு ஜசெக சோஸ்லீஸ்ட் இளைஞர் பிரிவு வரவேற்கிறது.

சத்தீஸ் முனியாண்டி

பினாங்கு ஜசெக சோஸ்லீஸ்ட் இளைஞர் பிரிவு

ஆட்சிமன்ற செயற்குழு உறுப்பினர்

0164384767

Sunday, June 26, 2011

அவன் இவன் - என் விமர்சனம் (Avan Ivan - My Review)


வெகு நாட்களுக்கு பிறகு, தனியாக திரையரங்குக்கு சென்று ஒரு படம் பார்த்தேன். அவன் இவன் என்ற தலைப்பை விட, அத்திரைப்படத்தை இயக்கியவர் பாலா என்பதுதான் என்னை ஈர்த்தது. முதல் படமான "சேது" விலேயெ ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இந்த பாலா. அவரின் இரண்டாவது படமான "நந்தா"வில் தனது கதாநாயகியை ஈழத்தில் இருந்து வந்த ஒரு அகதியாய் காட்டியிருந்தார். தேசிய விருது பெரும் திறமைகளையுடைய விக்ரம் என்ற தமிழ் நடிகனை அடையாளம் காட்டியவர் இந்த பாலா.

ஒரு சாதாரண தமிழனின் வாழ்க்கையை அச்சு அசலாக படம் பிடித்து நம் கண் முன் காட்டுவதில், பாலாவிற்கு தனித்திறமை உள்ளது. ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்டும் திறமையுடையவர். பல நேரங்களில் அதுப்போன்ற காட்சிகள் நகைச்சுவையாக அமைந்தாலும், போலியாக இருப்பதில்லை. அதுதான் பாலா என்ற தமிழ் இயக்குனரின் சிறப்பு. அவர் இயக்கிய "அவன் இவன்" என்ற திரைப்படத்தை பார்க்க சென்று, சிறிதும் ஏமாற்றமில்லாமல் திரும்பினேன்.

மிக நேர்த்தியான கதையமைப்பு, இயல்பான நடிப்பை வழங்கும் நடிகர்கள், நகைச்சுவையாக நகரும் கதை, அனைத்தும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. நெடுநாட்களுக்கு பிறகு நான் அதிகம் சிரித்தது இன்றுதான். ஏறக்குறைய சுமார் ஒன்றரை மணி நேரமாவது நான் சிரித்திருப்பேன். நான் மட்டுமல்ல ஒட்டு மொத்த திரையரங்கமே சிரித்தது. அவ்வளவு இயல்பான நகைச்சுவை. கடைசி அரைமணி நேரத்தில்தான் கதையே உள்ளது. இருப்பினும், எந்தவொரு சலிப்புமில்லாமல் படம் நகர்கிறது. ஒரு பொழுதுபோக்கு படமாக பாலா இதனை படைத்துள்ளது ஆச்சரியத்தையளித்தாலும், இது பாலா படம் என்பதற்கான முத்திரைகளை அங்காங்கே இழையோட வைத்துள்ளார்.

இப்படத்தில் குறிப்பாக ஒரு காட்சி, இந்திய அரசின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அந்த காட்சிக்காகவே, இப்படத்தை மேலும் ஒரு முறை பார்க்கலாம் என்றெண்ணியுள்ளேன். படத்தில் ஒரு காட்சியில், ஒரு கல்லுரியின் விரிவுரையாளர் ஒரு கேள்வி கேட்கிறார் :

விரிவுரையாளர் : இரண்டாவது மகாத்மா என்று அழைக்கப்படுபவர் யார்?
A) நெல்சன் மண்டேலா
B) மகிந்தா இராஜபக்சே

இந்த கட்டத்தில், படத்தின் நாயகர்களில் ஒருவரான ஆர்யா, தனது ருபாயை சுண்டி விடுகிறார்.

விரிவுரையாளர் : என்ன செய்கிறாய்?
நாயகன் : ருபாயை சுண்டி விட்டு விடை தேடுகிறேன். பூ விழுந்தால் மண்டேலா; தலை விழுந்தால் இராஜபக்சே!!
விரிவுரையாளர் : என்ன விழுந்தது?
நாயகன் : பூ விழுந்தது; மண்டேலா!
விரிவுரையாளர் : கோடான கோடி நன்றி யேசப்பா (கடவுளே)... கோடான கோடி நன்றி!!

போர்க்குற்றவாளி ராஜாபக்சேவை, மகாத்மா அளவுக்கு இந்திய அரசாங்கம் அரவணைத்தாலும் ஆச்சரியமில்லை என்பதை மிக நாசுக்காக, ஒரே காட்சியில் சொல்லியுள்ளார் பாலா. அதற்காகவே இப்படத்தை பார்க்கலாம் என்பது எனது கருத்து.

பாலாவின் பல சீரியசான படங்களைப் பார்த்து விட்டு, ஒரு நகைச்சுவை நிறைந்த சீரியஸ் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக திரையரங்குக்கு செல்லலாம்.

படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் (நாயகிகளைத் தவிர) அனைவருமே குடிக்கிறார்களே என்று ஒரு சிலர் முனுமுனுக்கலாம். மது குடிப்பதை அளவுக்கதிகமாகக் காட்டியுள்ளார் என்று சிலர் குறைக்கூறலாம். "ஆனால் உள்ளதைத்தானே திரையில் காட்டியுள்ளார்" என்பது எனது வாதம். தமிழன் என்ன குடிக்காத உத்தமனா? தமிழகத்தில் தமிழன் குடிப்பதைக் கண்டு, மது வியாபரம் இலாபமானது என்று அரசாங்கமே மதுக்கடைகளை நடத்துகிறது. மலேசியாவில், 24 மணி நேரமும் மலிவு சம்சுகளை விற்கும் கடைகளுக்கு வாடிக்கையாளன் தமிழன் தானே?

அனைத்து தமிழர்களும் குடிக்காரர்கள் இல்லையே என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம்தான்; இருப்பினும், சாமான்ய தமிழன் இன்றும் குடியில்தான் தங்கள் பொழுதைப் போக்குகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வோமே?

My Review :

Avan Ivan - Another Blockbuster attempt by Director Bala of Sethu fame. Director Bala, is the one who unleashed a multi talented actor who won the National Award, Vikram. I wanted to watch this movie because, it is Bala's movie. I was not disappointed.

It was a great entertainment. And i laughed a lot, after many days. Bala is specialist, when it comes to potray a common Tamil's lifestyle.

Wednesday, June 22, 2011

Just to say HI...

This is the place where I will write on various issues!
From Politics to Entertainment and so on....
My writing can be in English, தமிழிலும் இருக்கலாம், ataupun dalam Bahasa Malaysia!!
But one thing for sure, everything that I write here will be mine and just mine!
Won't be influenced or bias views, but mere honest views of mine!!
Hope I will enjoy blogging as how I did years back!